செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI))– எதிர்காலத்தை மாற்றும் தொழில்நுட்பம் !!!

https://www.aathiraiinfo.xyz/2025/05/Artificial-Intelligence-The-technology-that-will-change-the-future.html


இன்றைய உலகம் மிக வேகமாகவும், புதுமையானதாகவும் முன்னேறிக்கொண்டிருக்கிறது.அந்த முன்னேற்றத்திற்கு காரணமான முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்று தான் இந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI).
  • ஒரு காலத்தில் விஞ்ஞான தகவல்களில் மட்டுமே இடம் பெற்ற இந்த நுட்பம், இன்று நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
  • தற்போது அதிவேகமாக இந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) வளர்ந்து கொண்டே செல்கிறது.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

  • சாதாரணமாக மனிதர்கள் செய்யும் சிந்தனை, பகுத்தறிதல், முடிவெடுத்தல் மற்றும் கற்றல் போன்ற செயல்களை கணினி இயந்திரங்கள் மூலம் செய்யும் திறனை "செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)" என்று அழைக்கப்படுகிறது.
  • இதற்காக உருவாக்கப்படும் மென்பொருட்கள், மெஷின்கள் மற்றும் அல்காரிதங்களைப் பயன்படுத்தி, கணினிகள் தாங்களே முடிவுகளை எடுக்கலாம் மற்றும் தவறுகளை திருத்திக் கொள்ளலாம் மற்றும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.

செயற்கை நுண்ணறிவு எங்கெங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?

1. மொபைல் ஆப்ஸ் மற்றும் இணையம்

  • யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் போன்ற செயலிகள் உங்கள் விருப்பங்களை கணிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன.
  • கூகிள் தேடலில் நீங்கள் ஏற்கனவே தேடியதை அடிப்படையாக கொண்டு பரிந்துரைகள் தரப்படுகிறது.

2. மருத்துவம்

  • நோய்களை அடையாளம் காணும் சோதனைகள், ஸ்கேன் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்வது, மற்றும் மருத்துவ பரிந்துரைகள் போன்றவற்றில் AI உதவுகிறது.
  • கொரோனாவின் போது டாக்டர்கள் பறந்து செல்ல முடியாத இடங்களில் AI வழியாக தொற்று பரவல் கணிப்புகள் செய்யப்பட்டன.

3. தொழில்துறை (Industries)

  • உற்பத்தி தொழிற்சாலைகள், வாடிக்கையாளர் சேவை, பங்கு வர்த்தகம், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் AI பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

4. வாகனங்கள்

  • சுய இயக்க வாகனங்கள் (Self-driving cars) – டெஸ்லா போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் வாகனங்கள் AI அடிப்படையிலானவை.
  • AI உங்கள் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்ட, சாலையின் நிலையை கணிக்க மற்றும் பிற வாகனங்களை கண்காணிக்க உதவுகிறது.

5. மின்னணு வணிகம் (E-Commerce)

  • Amazon, Flipkart போன்ற தளங்களில் நீங்கள் பார்வையிடும் பொருட்கள், உங்கள் வரலாறை வைத்து AI அதற்கேற்ப பரிந்துரைகள் தருகிறது.

செயற்கை நுண்ணறிவின் நன்மைகள்:

  • வேகமான மற்றும் துல்லியமான முடிவுகள் .நேரத்தை மிச்சப்படுத்துதல் மற்றும் மனித பிழைகளை குறைத்தல், கற்றல் மற்றும் தன்னிச்சையான மேம்பாடு.

சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகள்:

  • தொழில் இழப்பு – சில வேலைகள் AI மூலம் தானாகவே செய்யப்பட்டால், மனிதர்களின் வேலை வாய்ப்புகள் குறையக்கூடும்.
  • தகவல் பாதுகாப்பு – தனிப்பட்ட தரவுகள் AI மூலம் சேகரிக்கப்படுவதால், பாதுகாப்பு கவலை ஏற்படுகிறது.
  • நெறிமுறை (Ethics) – ஒரு AI யின் முடிவுகள் நியாயமானவையா? பாகுபாடு இல்லாதவையா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

எதிர்காலம் எப்படி இருக்கும்?

  • AI ஒவ்வொரு நாளும் மேம்பட்டு கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் AI வழியாக உடல் பாகங்களை இயக்க முடியாமல் இருக்கும் நபர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.
  • வர்த்தக முடிவுகளை AI எடுத்துக் கொள்ளும்.
  • வீடுகள், நகரங்கள் அனைத்தும் “Smart” ஆக மாறும்.

செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் அறிவியல் சாதனம் அல்ல, இது நம் வாழ்க்கையின் முக்கியமான பங்காக மாறியுள்ளது. இதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நம்மை முன்னேற்றும் மற்றும் சக்தியாக மாறும். ஆனால் அதை நெறிமுறையுடன், சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
Previous Post Next Post